நமது பன்முக பண்பாட்டு, கலாசாரத்தின் அடையாளமாக உருது மொழி திகழ்கிறது என்று முதல்வர் ஷீலா தீட்சித் பெருமிதத்துடன் கூறினார்.
தில்லி தால்கடோரா விளாயாட்டு அரங்கத்தில் தில்லி உருது அகாதெமி சார்பில் புதன்கிழமை மாநாடு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 46 உருது ஆசிரியர்கள் மற்றும் உருது மொழியில் அதிக மதிப்பெண் பெற்ற 90 மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி ஷீலா தீட்சித் பேசியது:
உருது மொழி வளர்ச்சிக்கு தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தில்லி அரசின் இரண்டாவது அலுவல் மொழியாக உருது மொழி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் உருது அகாதெமி மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள உருது ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ. 11 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ. 2,000 ஆகவும், உருது பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை ரூ. 1,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன என்று ஷீலா தீட்சித் கூறினார்.
மாநாட்டில் தில்லி கல்வித் துறை அமைச்சர் கிரண் வாலியா, மொழிகள் துறை செயலாளர் எஸ்.எஸ். யாதவ், உருது அகாதெமியின் துணைத் தலைவர் அக்தார்-உல்-வாúஸ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னர், உருது ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியமாக ரூ. 1,500, உருது மொழியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை ரூ. 500 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

