சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்

"தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களுக்கு தலித் அந்தஸ்துக்கான சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று பிரதமர்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:35 pm

"தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களுக்கு தலித் அந்தஸ்துக்கான சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மாநிலங்களவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, பிரதமருக்கு செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களுக்கு தலித் அந்தஸ்து வழங்குவது தொடர்பான கோப்பு நீண்ட காலமாக அரசிடம் நிலுவையில் உள்ளது.

அது தொடர்புடைய அமைப்புகள் சார்பில் ஏராளமான மனுக்கள் அனுப்பப்பட்டும்கூட அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள முடியவில்லை.

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் அளித்துள்ள அறிக்கையில், "மற்ற ஜாதியினருடன் ஒப்பிடுகையில், தலித் கிறிஸ்தவர்களும், தலித் முஸ்லிம்களும் மிக மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்கூறிய கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரங்கராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக எம்.பி. கோரிக்கை: தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பிரிவில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் தென்சென்னை தொகுதி அதிமுக உறுப்பினர் சி. ராஜேந்திரன் வலியுறுத்தினார்.

மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், "தலித் கிறிஸ்தவர்கள் தங்களை எஸ்.சி. பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.

அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், "அரசியலமைப்பு (எஸ்.சி.) உத்தரவு 1950'-இல் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று அவர் கோரியுள்ளார்.