சென்னை, மார்ச் 1: கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அந்த மருத்துவமனையை போலீஸார் சோதனை செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை மாலை ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மார்ச் 1-ம் தேதி நள்ளிரவுக்குள் அந்த மருத்துவமனையில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். ஆனால் அங்கு எந்த வெடி பொருளும் சிக்கவில்லை.
இதனால் போலீஸார், அந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அந்த கடிதத்தில் அனுப்புநர் முகவரியில் மல்லிகா, பாலக்காடு, கேரளம் என குறிப்பிடப்பட்டு, கடிதம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

