அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில், கர்நாடகத்தில் பாஜக, கஜக, மஜத ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்த முடியும் என்று, அந்த மாநில முன்னாள் அமைச்சரும், கஜக மூத்த தலைவருமான எம்.பி.ரேணுகாச்சார்யா யோசனை தெரிவித்தார்.
இதுகுறித்து தாவணகெரேவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அண்மையில் நடைபெற்ற பெங்களூரு ஊரகம், மண்டியா ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பாஜக, கஜக, மஜத தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்றவில்லை.
எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததால், காங்கிரஸ் வேட்பாளர்கள் எளிதில் வெற்றி பெற்றனர்.
மூன்று அரசியல் கட்சிகளுக்கும் இடையே நிலவிய கூட்டணியை மக்களிடையே வெளிப்படையாகத் தெரிவித்திருந்தால், காங்கிரஸ் தோல்வி கண்டிருக்கும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில், பாஜக, கஜக, மஜத ஆகிய கட்சிகளிடையே கூட்டணி அமைத்து போட்டியிட்டால், காங்கிரஸ் வேட்பாளர்களை எளிதில் தோல்வியடைச் செய்யலாம்.
பாஜகவுக்கு எடியூரப்பாவின் தேவை அதிகரித்துள்ளது. எடியூரப்பா எடுக்கும் அரசியல் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்.
நரேந்திர மோடியின் தலைமையை நாடு எதிர்நோக்கியுள்ளது. அவர் மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியின் செல்வாக்கை பாஜக சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ரேணுகாச்சார்யா.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

