பாண்டவபுரா வட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
மண்டியா மாவட்டம், பாண்டவபுரா வட்டம், பட்டணசோமனஹள்ளியைச் சேர்ந்தவர் நிங்கப்பா (62). வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியில் வீட்டிலிருந்து டீ குடிக்க நிங்கப்பா சென்றார்.
அப்போது சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயி நிங்கப்பாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, உதவித்தொகை ரூ. 1 லட்சம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
பழைய மின்கம்பியால் பலத்த காற்றுக்கு அறுந்து விழுந்ததாகவும், அந்தப் பகுதியில் உள்ள மின்கம்பிகளைப் புதிதாக மாற்றித் தர வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையும் மேலிடத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

