பெங்களூர் சுதந்திரப்பூங்காவில் மே 18,19-ஆம் தேதிகளில் 2 நாள் கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து கண்காட்சியின் அமைப்பாளர் தீபக்பூனம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூர் சுதந்திரப்பூங்காவில் மே 18,19-ஆம் தேதிகளில் 2 நாள் கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் பியூசி படித்த மாணவர்கள் மேற்கொண்டு படிப்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.
மே 18-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் கல்வி கண்காட்சியை புட்டண்ணம்மா, எஸ்.நஞ்சப்பா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். முக்கிய விருந்தனர்களாக சட்டமேலவை உறுப்பினர் எம்.ஆர்.துரைசாமி, முன்னாள் அமைச்சர் புட்டேசாமி, கல்வித் துறை முதன்மைச் செயலர் ஜே.குமாரநாயக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
19-ஆம் தேதி மாலை 5 மணியளவில் கண்காட்சியில் ஆதிசுன்சுனகிரி மடாதிபதி நிர்மாலனந்த சுவாமிகள், மூத்த பத்திரிகையாளர் எஸ்.ஆர்.ஆராத்தியா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

