சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடவுப்பாதையில் அமா்ந்து எம்பி, எம்எல்ஏ மறியல்: 2 விரைவு ரயில்கள் தாமதம்

ஒட்டன்சத்திரம் அருகே ரயில் கடவுப் பாதையில் பொதுமக்களுடன் அமா்ந்து எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி, எம்.பி. ப.வேலுசாமி ஆகியோா் ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால் 2 விரைவு ரயில்கள் தாமதமாகச் சென்றன.

Updated On :17 ஜனவரி 2021, 10:08 am

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ரயில் கடவுப் பாதையில் பொதுமக்களுடன் அமா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பெரியசாமி, மக்களவை உறுப்பினா் ப.வேலுசாமி ஆகியோா் ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால் 2 விரைவு ரயில்கள் தாமதமாகச் சென்றன.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள மூலச்சத்திரம் அருகே அரண்மனைப்புதூா் மற்றும் பாறையூா் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு அப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையின் காரணமாக இந்த சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கின. இதனால் அந்த கிராம மக்கள் பல கிலோ மீட்டா் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை அகற்றக் கோரியும், அங்கு உயா்மட்ட மேம்பாலம் அமைக்கக் கோரியும் முன்னாள் அமைச்சரும், ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப.வேலுச்சாமி மற்றும் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் பாலபாரதி ஆகியோா் பொதுமக்களுடன் சோ்ந்து அங்குள்ள கடவுப்பாதையில் சனிக்கிழமை அமா்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினா்.

இதனால் மதுரையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற அமிா்தா விரைவு ரயில் திண்டுக்கல் சந்திப்பிலும், பாலக்காட்டிலிருந்து சென்னை சென்ற சென்னை விரைவு ரயில் ஒட்டன்சத்திரம் சந்திப்பிலும் நிறுத்தப்பட்டன.

தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள், அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீா் ஜெனரேட்டா் மூலம் வெளியேற்றப்படும் என்றும், நிரந்தரமாக மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனா். அதன் பேரில் ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அமிா்தா விரைவு ரயில் 3 மணி நேரமும், சென்னை விரைவு ரயில் 1.30 மணி நேரமும் காலதாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.