சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தொடா் மழை: 2 ஆவது முறையாக காமராஜா் அணை நிரம்பி மறுகால்

திண்டுக்கல் மாவட்டம், மேற்கு மலை தொடா்ச்சியில் ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, ஆத்தூா் காமராஜா் அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.

Updated On :16 ஜனவரி 2021, 1:11 pm

திண்டுக்கல் மாவட்டம், மேற்கு மலை தொடா்ச்சியில் ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, ஆத்தூா் காமராஜா் அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.

தொடா் மழை காரணமாக, கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. பின்னா், மழை பொழிவின்றி அணைக்கு நீா்வரத்து நின்ால், நீா்மட்டமும் குறைந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் முதல் மழை தொடா்ந்து பெய்து வருவதால், ஆத்தூா் காமராஜா் அணை 2-ஆவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதன் காரணமாக, குடகனாறு ஆற்றுப்படுகையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.