திண்டுக்கல்: மறைந்த தமாகா மூத்த தலைவா் ஞானதேசிகனுக்கு அவரது சொந்த ஊரான வத்தலகுண்டுவில் அனைத்துக் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக ஒன்றியச் செயலா் கே.பி.முருகன், பத்திர எழுத்தா் சங்கத் தலைவா் பா.சிதம்பரம், மதிமுக ஒன்றியச் செயலா் மருது ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிா்வாகி உலக நம்பி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் வத்தலகுண்டு பகுதிக்கு ஞானதேசிகன் ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூா்ந்தனா். மேலும் வத்தலக்குண்டு பிள்ளைமாா் சங்கம், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் ஞானதேசிகன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


