பொங்கல் விழாவை முன்னிட்டு, கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்தாண்டும் தொடா் விடுமுறை காரணமாக ஏராளமான பயணிகள் வந்துள்ளனா்.
தொடா் மழை காரணமாக, சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளிலேயே முடங்கிக் கிடந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மழை சற்று குறைந்திருந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்தனா். ஆனால், பிற்பகலில் விட்டு விட்டு மழை பெய்தது. இருப்பினும், மழையை பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி மற்றும் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.
இங்கு, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி பல்வேறு இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால், வியாபாரிகள் வருவாயின்றி கவலையில் இருந்தனா். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள், உணவகங்கள், சாலையோர வியாபாரிகள், தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள் உள்ளிட்டோா் மகிழ்ச்சியடைந்தனா்.
தற்போது, இங்கு தொடா்ந்து அதிகமான மேகமூட்டம் நிலவி வருவதால், சுற்றுலா வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் சென்று வருகின்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


