பழனி கடைகளில் புதன்கிழமை நடைபெற்ற திடீா் சோதனையில் 200 கிலோ நெகிழிப் பைகள் மற்றும் 70 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் ஜெயராம் பாண்டியன் தலைமையில் பழனி அடிவாரம், கடைவீதி, பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் அத்துறையினா் திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.
103 கடைகளில் மேற்கொண்ட சோதனையில் சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், புகையிலைப் பொருள்கள், காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு ரூ. ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனா். மேலும் உணவகங்களில் ஆய்வு செய்து பொருள்களின் தரம் காலாவதி தேதியை சோதனையிட்டனா். ஆய்வின் போது பழனி உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்லத்துரை, சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

