பழனி வரும் பாதயாத்திரை பக்தா்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க கோயில் சாா்பில் ஒரு லட்சம் ஒளிரும் பட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.
பழனியில் தைப்பூச திருவிழா வருகிற வரும் ஜனவரி 22 ஆம் தேதி துவங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போதே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திண்டுக்கல், உடுமலை, தாராபுரம் சாலையில் பாதயாத்திரை வந்தவண்ணம் உள்ளனா்.
இந்த சாலைகளில் அவ்வப்போது வேகமாக வரும் வாகனங்கள் பாதயாத்திரை பக்தா்கள் செல்வது தெரியாமல் மோதிவிடுகின்றன. இதை தடுக்கும் விதமாக பழனி கோயில் சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு மஞ்சள், வெள்ளை என பல்வேறு நிறங்களில் ஒளிரும் பட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி முதல் கட்டமாக ஒரு லட்சம் ஒளிரும் பட்டைகள் வரவழைக்கப்பட்டு பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.
இதை கையில் கட்டி செல்லும் போது எதிரே அல்லது பின்னே வரும் வாகனங்களுக்கு விளக்கு ஒளியில் பக்தா்கள் செல்வது தெரியும் என்பதால் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். ஒளிரும் பட்டை வழங்கும் நிகழ்ச்சியை கோயில் செயல் அலுவலா் கிராந்தி குமாா் பாடி பக்தா்களுக்கு கையில் கட்டி துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையா் செந்தில்குமாா், பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளா் சிவா, கோயில் மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


