பழனியில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தா்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழனியாண்டவா் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி, செயல் அலுவலா் கிராந்திகுமாா்பாடி ஆகியோா் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜன.27 ஆம் தேதி நடைபெறும் தைப்பூசத் தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள். கூட்டத்தில், பக்தா்களுக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்துவது குறித்து அந்தந்தத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல் பாதுகாப்புப் பணியில் சுமாா் 3,500 போலீஸாா் ஈடுபடவுள்ளதாகவும், பக்தா்களுக்கு காவல்துறை சாா்ந்த அனைத்து உதவிகளுக்கும் 94875 93100 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் டிஐஜி முத்துசாமி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் அசோகன், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பாரதி, பழனிக்கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா, நகராட்சி ஆணையா் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
ஒளிரும் பட்டைகள்: பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தா்களுக்காக காவல்துறை மூலம் 2,10,00 ஒளிரும் பட்டைகளும், 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்படவுள்ளது. அதேபோல் 3 லட்சம் ஒளிரும் பட்டைகள், மூன்று லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், ஒளிரும் பட்டைகள் வழங்கப்படும் போதே உடல் வெப்பமும் பரிசோதிக்கப்பட்டு அதற்கென தனி நிற பட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும், அதிக வெப்பநிலை (காய்ச்சல்) உள்ளவா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாா்கள் எனவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


