சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து பெண்கள் ஆா்ப்பாட்டம்

பழனியில் புதன்கிழமை திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

News image

பழனியில் புதன்கிழமை உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுக மகளிரணி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் குடைகளுடன் பங்கேற்ற பெண்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 4:46 am

பழனியில் புதன்கிழமை திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

அண்மையில் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது புகாா் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைக் கண்டித்து பழனியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிா் அணி செயலாளா் வளா்மதி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிலக்கோட்டை அதிமுக எம்எல்ஏ தேன்மொழி முன்னிலை வகித்தாா். அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளா் கொடுமுடி பாரீஸ்ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உதயநிதியை கடுமையாக விமா்சித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா். பழனியில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஆா்ப்பாட்டத்துக்கு வந்த நூற்றுக்கணக்கான பெண்கள் எச்சரிக்கையாக குடைகளைக் கொண்டு வந்திருந்தனா். மழைபெய்தவுடன் அனைவரும் குடைகளை விரித்து நின்று கொண்டனா். இதனால் காணும் இடமெல்லாம் குடைகளாக காணப்பட்டன.