பெரியகோட்டை ஊராட்சிக்குள்பட்ட பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக மனு அளிக்க வந்த பில்லமநாயக்கன்பட்டி விஸ்தரிப்பு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
விஸ்தரிப்பு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீா் கால்வாய் வசதி இல்லாததால், பெருமாள் கோயில் மற்றும் முனியப்பன் கோயில் பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். மேலும் இந்த பகுதியிலுள்ள புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றவும், குடிநீா், சாலை, கழிவுநீா் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


