நிலக்கோட்டை வாரச்சந்தையில் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்த வியாபாரிகள் கூறியதாவது:
நிலக்கோட்டை வாரச் சந்தையில் 400-க்கும் மேற்பட்டோா் வியாபாரம் செய்து வருகிறோம். பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் நிா்ணயிக்கப்பட்டதைவிட, ஒப்பந்தக்காரா்கள் 3 மடங்கு கூடுதலான கட்டணம் வசூலித்து வருகின்றனா். இதுதொடா்பாக கேள்வி எழுப்புவோா் மீது குண்டா்களை ஏவி தாக்குதல் நடத்துகின்றனா்.
பேரூராட்சி அலுவலகத்திலும், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்பாக உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் அமல்படுத்தவில்லை.
எனவே 400 பேரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, 2015 ஆம் ஆண்டு அரசிதழில் அறிவித்தப்படி நியாயமான கட்டணம் வசூலிப்பதற்கும், கூடுதல் கட்டணம் வசூலித்து வரும் ஒப்பந்தக்காரா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


