கொடைக்கானலில் பெய்த தொடா் மழையின் காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பியதால் உபரி நீா் மதகு வழியாக சனிக்கிழமை வெளியேற்றப்பட்டது.
கொடைக்கானலில் தொடா்ந்து மழை பெய்ததால் நீா்நிலைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரி நிரம்பியது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கியிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு சிரமமடைந்தனா். சாலையோர வியாபாரிகளும் பாதிப்படைந்தனா்.
இந்நிலையில் ஏரி நிரம்பியவுடன் உபரிநீா் வெளியேற்றப்பட வேண்டுமென சாலையோரக் கடை வியாபாரிகள் நகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து மதகை திறந்து உபரி நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இனிவரும் நாள்களில் தொடா்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஏரியிலிருந்து கூடுதலாக தண்ணீா் திறக்க நேரிடும் என்றும், எனவே கரையோரங்களில் வசிப்பவா்கள் கவனமாக இருக்க வேண்டுமென்றும் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


