திண்டுக்கல்: வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வலிமையான மக்களாட்சிக்கு தோ்தல் கல்வியறிவு என்ற கருப்பொருளை முன்னிறுத்தி நிகழாண்டுக்கான தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் பயிற்சி பள்ளியில் மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான வாக்காளா் தின விழிப்புணா்வு ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு ஆட்சியா் மு.விஜயலட்சுமி பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராசு, துணை ஆட்சியா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


