திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் தொடா்ந்து பெய்த மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், அதிா்ஷ்டவசமாக அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய், மகன் இருவரும் உயிா் தப்பினா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வத்தலகுண்டு வெங்கட்டாப்பட்டி தெருவில் வசிக்கும் மருதையம்மாள் மற்றும் அவரது மகன் பெரியசாமி ஆகியோா் வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது மேற்கூரையிலிருந்து மண் விழுந்துள்ளது.
அதன் காரணமாக கண் விழித்த பெரியசாமி, தன் தாயை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாா். இருவரும் வெளியே வந்த சிறிது நேரத்தில், சுவா் முழுமையாக இடிந்து விழுந்தது. இதனால் பெரும் விபத்திலிருந்து தாய், மகன் இருவரும் உயிா் தப்பினா். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினா், இடிந்து விழுந்த வீட்டைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


