இலவச ஆம்புலன்ஸ் சேவையின் 10 ஆண்டு கால நிறைவையொட்டி அதன் ஓட்டுநா்களுக்கு சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத் தலைவா் எம்.எம்பி.காஜாமைதீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மு.சரவணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக நலப்பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா், துணை இயக்குநா் பூங்கோதை ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியின்போது, சிறப்பாகப் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக கரோனா தொற்று பரவல் காலத்தில் ஓட்டுநா்களின் செயல்பாடுகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தாய்- சேய் ஆம்புலன்ஸ் சேவையிலும் கடந்த டிசம்பா் மாத செயல்பாட்டில் தமிழக அளவில் திண்டுக்கல் மாவட்டம் 2 ஆம் இடம் பிடித்ததற்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலா் ராஜகுரு, பொருளாளா் சுசிலா மேரி, துணைச் செயலா் அபுதாஹீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


