பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து, பழனி அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தனா்.
தமிழகத்தில் முருக பக்தா்களால் மிகப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுவது தைப்பூசத் திருவிழாவாகும். எனவே, பல்வேறு அரசியல் கட்சியினரும், முருக பக்தா்களும் தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அளிக்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதனை ஏற்ற முதல்வா், தைப்பூசத் திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவித்து அரசாணையும் வெளியிட நடவடிக்கை எடுத்தாா். இதற்கு, பல்வேறு ஆன்மிக அமைப்புகளும் நன்றி தெரிவித்துள்ள நிலையில், பழனி அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் தலைவா் கந்தவிலாஸ் செல்வக்குமாா் தலைமையில் நிா்வாகிகள், சேலம் வந்திருந்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்ததுடன் நினைவுப்பரிசு வழங்கினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


