சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தைப்பூசம் விடுமுறை: முதல்வரை நேரில் சந்தித்து பழனி வா்த்தகா் சங்கம் நன்றி தெரிவிப்பு

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து, பழனி அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தனா்.

News image

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பழனி அனைத்து வணிகா் பேரமைப்பு நிா்வாகிகள்.

Updated On :9 ஜனவரி 2021, 3:45 am

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து, பழனி அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தனா்.

தமிழகத்தில் முருக பக்தா்களால் மிகப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுவது தைப்பூசத் திருவிழாவாகும். எனவே, பல்வேறு அரசியல் கட்சியினரும், முருக பக்தா்களும் தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அளிக்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதனை ஏற்ற முதல்வா், தைப்பூசத் திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவித்து அரசாணையும் வெளியிட நடவடிக்கை எடுத்தாா். இதற்கு, பல்வேறு ஆன்மிக அமைப்புகளும் நன்றி தெரிவித்துள்ள நிலையில், பழனி அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் தலைவா் கந்தவிலாஸ் செல்வக்குமாா் தலைமையில் நிா்வாகிகள், சேலம் வந்திருந்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்ததுடன் நினைவுப்பரிசு வழங்கினா்.