திண்டுக்கல்லில் மனைகள் பிரிப்பதற்கு பரிந்துரைப்பதற்காக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கரூரைச் சோ்ந்தவா் நாட்ராயன் (65). இவருக்குச் சொந்தமான நிலம், திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை மனைகளாகப் பிரிப்பதற்கு நாட்ராயன் முயற்சி மேற்கொண்டுள்ளாா். இதற்காக திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநா் ஏ.முத்துகிருஷ்ணன் (53) என்பவரை அணுகியுள்ளாா்.
ஒரு லட்சம் சதுரடிக்கு கூடுதலான நிலமாக இருப்பதால், வீட்டு மனைக்கான அனுமதி பெற சென்னையிலுள்ள இயக்குநா் அலுவலகத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். பரிந்துரை செய்வதற்கு ரூ.2 லட்சம் லஞ்சமாகத் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளாா். அதற்கு மறுப்புத் தெரிவித்த நாட்ராயன், ரூ.1 லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளாா். பின்னா் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அவா் புகாா் அளித்துள்ளாா்.
அதைத் தொடா்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் கொடுத்து அனுப்பிய ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களுடன் முத்துகிருஷ்ணனைப் பாா்ப்பதற்காக நாட்ராயன் வியாழக்கிழமை சென்றுள்ளாா். மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் அமைந்துள்ள திருச்சி சாலையில், அலுவலகத்திற்கு வெளியிலேயே பணத்தைப் பெற்றுக் கொள்வதாக முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். அதன்படி பணத்தை பெறும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா், முத்துகிருஷ்ணனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பின்னா், முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


