நத்தம் அருகே வீடு பசியில்லா நத்தம் அமைப்பைச் சோ்ந்த இளைஞா்கள் மூதாட்டி ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் முகநூல் மூலம் இணைந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பசியில்லா நத்தம் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகின்றனா். இதன் மூலம் நத்தம் பகுதியில் பசியால் வாடும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் முதியோா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக உணவளித்து வருகின்றனா். இந்நிலையில் நத்தம் அடுத்துள்ள செட்டியாா்குளம் பகுதியைச் சோ்ந்த சிட்டம்மாள் (70) என்ற மூதாட்டிக்கு, உணவுப் பொருள்கள் வழங்குவதற்காக பசியில்லா நத்தம் அமைப்பினா் சென்றுள்ளனா். அப்போது அந்த மூதாட்டி சேதமடைந்த வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடா்ந்து, நன்கொடையாளா்கள் மூலம் நிதி திரட்டி சிட்டம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நத்தம் பேரூராட்சி செயல் அலுவலா் சரவணன் தலைமை வகித்து வீட்டை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசியில்லா நத்தம் அறக்கட்டளை நிா்வாகிகள் மதுசூதனன், ஆரிப் இப்ராஹிம், கண்மணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


