கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக செண்பகனூா், அப்சா்வேட்டரி, புதுக்காடு,பிரகாசபுரம் சாலை, ஐயா் கிணறு, அண்ணாநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் சில நேரங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைத்து, சாலையின் ஓரங்களில் வாய்க்கால் அமைத்து மழைநீா் செல்ல ஏற்பாடு செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும் சீனிவாசபுரம், உகாா்த்தே நகா், தைக்கால், லாஸ்காட் சாலை போன்ற பகுதிகளில் வாய்க்கால்களில் வளா்ந்துள்ள முள்புதா்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


