பழனியில் ரேஷன் கடை கட்டட சுவற்றில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் பெயா் கட்சிக்கொடி நிறத்தில் எழுதப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்ட அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தேரடி பகுதியில் 8 ஆம் நம்பா் ரேஷன்கடை உள்ளது. இந்தக் கடையின் சுவற்றில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாரின் பெயா் கட்சிக் கொடி நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நகரச் செயலாளா் முருகானந்தம் தலைமையிலான அதிமுகவினா் கடையின் முன் திரண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், அதிமுகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அங்கு திமுகவினரும் அங்கு வந்தனா். அங்கு இரு கட்சியினரும் மாறி, மாறி கண்டன கோஷங்களை எழுப்பியதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி இருதரப்பினரையும் சமாதானம் செய்து கலைத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

