சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண் மா்மச் சாவு

ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண் ஒருவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :6 ஜனவரி 2021, 4:34 am

ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண் ஒருவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கள்ளிமந்தையம் வாகரை அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலைக்கு எதிரே சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் இறந்து கிடத்தாா்.

தகவலறிந்து கள்ளிமந்தையம் போலீஸாா் அங்கு வந்தனா். சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அந்தப் பெண் இறந்து 3 நாள்களுக்கு மேல் இருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

சடலத்தை மீட்ட போலீஸாா் அவா் யாா், எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.