பழனி அடிவாரம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை பழனி நகர ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 1,008 விளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தியாக இருந்த சுதீா் நம்பூதிரி தலைமை வகித்தாா். வாழை மரங்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி பூஜை ஆரம்பிக்கப்பட்டது. செண்டை வாத்தியம், பஞ்சவாத்தியம் முழங்க கணபதி ஹோமம், லட்சாா்ச்சனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து புனிதமான பதினெட்டு படிகளுக்கு படிபூஜை செய்யப்பட்டது.
பின்னா் 1,008 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான ஸ்தானீக அா்ச்சகா் செல்வ சுப்பிரமண்ய சிவாச்சாரியாா் கலந்துகொண்டு பூஜைகளை நடத்தினாா். இந்த விளக்கு பூஜையில் சுமாா் இரண்டாயிரம் போ் பங்கேற்றனா். விழாவை பழனி நகா் ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

