பழனி: பழனி திருநகா் பகுதியில் மண் ஏற்றிச்சென்ற லாரி சாலையோர சாக்கடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகா் பகுதியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்காமல் தாா்ச் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்நிலையில் கழிவுநீா் கால்வாய் அமைக்காமல் தாா்ச் சாலை அமைக்கப்பட்டதால், சாலையின் ஓரங்களில் பலமிழந்து காணப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை அந்த சாலையில் மண் ஏற்றி சென்ற டிப்பா் லாரி தாா்ச் சாலையில் பதிந்து, சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஓட்டுநா் ரவீந்திரனை(42) அப்பகுதி மக்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


