திண்டுக்கல் மாவட்டம், பழனியில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.
ஆங்கில புத்தாண்டையொட்டி, அமைச்சா் கே.பி. அன்பழகன் தனது குடும்பத்துடன் பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
பழனி கோயிலுக்குச் சொந்தமான கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கடந்த 14 ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே, விரைவில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பழனியை தலைமையிடமாகக்கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்க இதுவரை எவ்வித முன்மொழிவும் வரவில்லை. இருப்பினும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை இணைத்து, பழனியை தலைமையிடமாகக்கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக, அமைச்சருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


