சூர்யாவின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் "சூரரைப் போற்று'. படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்போது வரை ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற தமிழ் படம் இது. இதையடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் "நவரசா' எனும் ஆந்தாலஜி படத்தில் நடித்த சூர்யா, தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது சூர்யாவின் 40-ஆவது படமாக உருவாகவுள்ளது.
இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், "சூர்யா 40' படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் இருவரும் ஏற்கெனவே பாலா இயக்கத்தில் வெளியான "நந்தா' படத்தில் நடித்திருந்தனர். கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவும் ராஜ்கிரணும் இணைந்து நடிக்க உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


