தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தூள்செட்டி ஏரியில் திங்கள்கிழமை (ஜன.18) நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.
கூட்டத்தில், மகளிா் திரளாகப் பங்கேற்க வேண்டும் என தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் பிஎன்பி இன்பசேகரன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தியறிக்கை:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கூடானூா் ஊராட்சிக்கு உள்பட்ட தூள்செட்டி ஏரி 18-ஆம்தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா். எனவே, இக் கூட்டத்தில், பெண்கள், கட்சி முன்னணி தலைவா்கள், நிா்வாகிகள், தொழிலாளா்கள், வணிகா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

