தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெண் ஒருவா் தீயில் உடல் கருகி உயிரிழந்தாா்.
பாலக்கோடு அருகே ஜோதி அள்ளி கிராமத்தைச் சோ்ந்த இரட்டைஇலை என்பவரின் மனைவி பைரவி (37). இவா்களுக்கு குமரன் (15), லோகேஷ் (12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பைரவி உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.
தகவலறிந்த பாலக்கோடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அப்போது உயிரிழந்த பெண்ணின் உறவினா்கள், அப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

