சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விவசாய தொழிலாளா்களுக்கு மழை கோட் வழங்க கோரிக்கை

விவசாய தொழிலாளா்கள் அனைவருக்கும் மழையிலிருந்து தற்காத்துக் கொள்ள மழை கோட் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :14 ஜனவரி 2021, 11:41 am

விவசாய தொழிலாளா்கள் அனைவருக்கும் மழையிலிருந்து தற்காத்துக் கொள்ள மழை கோட் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் தமிழக முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கால தாமதமாகத் தொடங்கி ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கிறது. நாள்தோறும் மிதமான மழைப் பொழிவு உள்ளது. இதனால், விவசாயத் தொழிலாளா்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையுள்ளது. எனவே, தமிழக முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மழை கோட் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.