பாப்பாரப்பட்டியில் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின் கீழ் கடை வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் 2020-21 ஆம் நிதியாண்டில் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின்கீழ் கடன் பெற ஏராளமான கடை வியாபாரிகள் விண்ணப்பித்திருந்தனா்.
இதில் தகுதியுள்ளப் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி பாப்பாரப்பட்டி தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மண்டல பேரூராட்சிகளின் இயக்குநா் கண்ணன் கலந்து கொண்டு,தமிழ்நாடு கிராம வங்கியின் மூலம் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் காசோலையினை வழங்கினாா்.
இதில், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் விஜயசங்கா், வங்கி மேலாளா் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


