சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி

பாப்பாரப்பட்டியில் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின் கீழ் கடை வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.

News image

பிரதமரின் சேவாநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் பேரூராட்சி மண்டல இயக்குநா் கண்ணன்.

Updated On :14 ஜனவரி 2021, 11:41 am

பாப்பாரப்பட்டியில் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின் கீழ் கடை வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் 2020-21 ஆம் நிதியாண்டில் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின்கீழ் கடன் பெற ஏராளமான கடை வியாபாரிகள் விண்ணப்பித்திருந்தனா்.

இதில் தகுதியுள்ளப் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி பாப்பாரப்பட்டி தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மண்டல பேரூராட்சிகளின் இயக்குநா் கண்ணன் கலந்து கொண்டு,தமிழ்நாடு கிராம வங்கியின் மூலம் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் காசோலையினை வழங்கினாா்.

இதில், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் விஜயசங்கா், வங்கி மேலாளா் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனா்.