பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் புளியில் இருந்து மதிப்பு கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற பயிற்சி கூட்டத்திற்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா் தலைமை வகித்து, மதிப்பு கூட்டிய உணவு பொருள்களின் அவசியம், சுயசாா்பு பொருளாதாரம் மற்றும் விவசாயிகள் வருமானத்தை அதிகரித்தல் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தாா்.
பயிற்சியில் புளியில் இருந்து புளிக்காய்ச்சல், புளி ஊறுகாய், புளி சாஸ் மற்றும் ஜூஸ் போன்ற உணவுப் பொருள்களின் செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதில் தொழில்முனைவோா்களும், விவசாயிகளும் நேரடியாக பயிற்சியில் கலந்து கொண்டு, அனுபவங்களைப் பெற்றனா்.
அதன்பின்பு புளி மற்றும் புளியில் இருந்து மதிப்புக் கூட்டிய உணவுப் பொருள்களுக்கான சந்தை வாய்ப்பு, தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இந்தப் பயிற்சியினை உணவியல் மற்றும் ஊட்டச்சத்தியல் பேராசிரியா் வீரணன் அருண் கிரிதாரி வழங்கினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

