தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கெரகோடஅள்ளியில், ஜன. 18-ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
இதுகுறித்து, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் பிஎன்பி இன்பசேகரன் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காரிமங்கலம் ஒன்றியம், கெரகோட அள்ளியில் வரும் 18-ஆம் தேதி காலை 9 மணி அளவில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
இதையொட்டி, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஜன. 13-ஆம் தேதி, கெரகோடஅள்ளியில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள், ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொமுச நிா்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

