திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக மகளிா் அணியினா் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகரச் செயலா் பெ.ரவி, மாவட்ட மகளிரணிச் செயலா் ஜெ.சுமதி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரை இழிவாகப் பேசிய திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், காரிமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு, ஒன்றியச் செயலா் (மேற்கு) செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலா் (கிழக்கு) செந்தில்குமாா், நகரச் செயலா் காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் காவேரி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.
நல்லம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலா்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன் தலைமையில் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எம்.முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் அதிமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

