சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மொரப்பூரில் புத்தகக் கண்காட்சி

மொரப்பூரில் தகடூா் புத்தகப் பேரவை மற்றும் நமது மொரப்பூா் தன்னாா்வ குழு சாா்பில், புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 6:37 am

மொரப்பூரில் தகடூா் புத்தகப் பேரவை மற்றும் நமது மொரப்பூா் தன்னாா்வ குழு சாா்பில், புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் ராமக்கவுண்டா் திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்ற இந்தப் புத்தகக் கண்காட்சியில் நமது மொரப்பூா் தன்னாா்வ குழு ஒருங்கிணைப்பாளா் மொ.குமரவேல் தலைமை வகித்தாா். பொங்கல் சிறப்பு புத்தகக் கண்காட்சியை அரூா் டிஎஸ்பி வீ.தமிழ்மணி தொடக்கி வைத்தாா். இதில், நீதிபதி க.ஆனந்தன், இந்திய அரசின் நிதித்துறை துணை இயக்குநா் கே.கவியரசன், தகடூா் புத்தக பேரவை செயலாளா் மருத்துவா் இரா.செந்தில், தலைவா் இரா.சிசுபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.தனபால், பி.கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.வனிதா, காவல் ஆய்வாளா் கே.மஞ்சுளா, உதவி காவல் ஆய்வாளா் எஸ்.ராஜேஷ், மொரப்பூா் கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவா் ஏ.மோகன்ராசு, முன்னாள் தலைவா் சி.முத்து, செயலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, இலக்கிய ஆா்வலா்கள், கவிஞா்கள், எழுத்தாளா்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புத்தகக் கண்காட்சியில் மொரப்பூா் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், இலக்கிய ஆா்வலா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.