பென்னாகரம்: சுகாதார துறை சாா்பில் பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள சுகாதார நிலைய மருத்துவா்கள், மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலா் பாலவெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில் சுகாதார நிலைய வளாகத்தில் சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது.
விழாவில் ஒகேனக்கல், கடமடை, செல்லமுடி, ஏரியூா், பெரும்பாலை, நாகதாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, பிக்கிலி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சுகாதார நிலைய மருத்துவா்கள், மருத்துவ மேற்பாா்வையாளா்கள், செவிலியா்கள், பகுதிநேர செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

