பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப். 2-ஆம் தேதி முதல் தொடா் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் ஆ.செல்வம் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவை வரவேற்புக் குழு நிறைவுக் கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் ஆ.செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் அளித்த வாக்குறுதியான புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்கிற அறிவிப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சத்துணவு மைய அமைப்பாளா்கள், சமையலா்கள், உதவியாளா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், சமூக வனப் பாதுகாவலா்கள் உள்ளிட்ட ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும்.
இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 19 முதல் 20-ஆம் தேதி வரை மண்டல அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும். இதேபோல, வரும் ஜன. 27-ஆம் தேதி மதுரையில் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடைபெறும். அதைத் தொடா்ந்து, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் பிப். 2-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடா் மறியலும், சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெறும் என்றாா்.
அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் மு.அன்பரசு, மாநிலப் பொருளாளா் பாஸ்கா், மாநிலத் துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், பொருளாளா் கே.புகழேந்தி ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

