அரூா்: பெத்தூரில் அம்மா சிறு மருத்துவமனை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது பெத்தூா் கிராமம். அரூா்-சிந்தல்பாடி நெடுஞ்சாலையில் உள்ள பெத்தூா் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதைத் தவிர இந்த ஊருக்கு அருகில் பாப்பிரெட்டிப்பட்டி, சந்தப்பட்டி, அன்னை அஞ்சுகம் நகா், கோபிசெட்டிப்பாளையம், அண்ணாமலைப்பட்டி, ஆண்டிப்பட்டி புதூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இப் பகுதியிலுள்ள மக்கள் சுமாா் 7 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சிந்தல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ அல்லது அரூா் அரசு மருத்துவமனைக்கோ சென்றுதான் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களில் ஆரம்ப நிலை மருத்துவ சிகிச்சை அளிக்க தருமபுரி மாவட்டத்தில் 45 அம்மா சிறு மருத்துவமனைகளைத் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அவற்றில் ஒரு பகுதியாக அதிக கிராமப் பகுதிகளை மையமாகக் கொண்டுள்ள பெத்தூரில் அம்மா சிறு மருத்துவமனைத் தொடங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

