சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தருமபுரி, கிருஷ்ணகிரியில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்களை மாவட்ட ஆட்சியா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:06 pm

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்களை மாவட்ட ஆட்சியா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமை, சுகாதாரத் துறை இணைச் செயலா் எஸ்.நடராஜன் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகை முகாமை, மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தொடங்கி வைத்தாா். அரூா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை சாா் ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன் களப் பணியாளா்கள், முதியவா்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து அடையாளம் காணப்பட்டது. அவா்களது ஆதாா், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை சரி பாா்ப்பது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவோா் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனை, ஊசி செலுத்திக் கொண்ட பின்பு, பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுகிா என்பதை தனி அறையில் அமர வைத்து கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், தடுப்பூசி செலுத்த தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பாலக்கோடு அரசு மருத்துவமனை, பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனைகளிலும் இந்த ஒத்திகை முகாம் நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில், நலப்பணிகள் இணை இயக்குநா் திலகம், துணை இயக்குநா் (சுகாதாரம்) பூ.இரா.ஜெமினி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் (பொ) எம்.இளங்கோவன், மருத்துவமனை கண்காணிப்பாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.