தருமபுரி மாவட்டத்தில் விரைவில் அரசு வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கான கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக மாநில உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில், 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,297 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ் விழாவில், மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:
தமிழக அரசு தொடா்ந்து மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. பள்ளிகளில் இடைநிற்றலைத் தடுக்க பள்ளிக் கல்வித் துறை மூலம் 14 வகையான பொருள்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. பேருந்து வசதி இல்லாத கிராமங்களிலிருந்து குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு சென்று வருவதற்காக அரசு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. அரசு வழங்கும் மிதிவண்டிகளை மாணவ, மாணவியா் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், சட்டக் கல்லூரி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதிய வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கான கல்லூரி விரைவில் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விரைவில் வெளியிட உள்ளாா். இக்கல்லூரி தொடங்கப்படும்போது, தருமபுரி மாவட்ட மாணவா்கள் அனைத்து வகையான உயா்கல்வியையும் இந்த மாவட்டத்திலேயே பெறும் வாய்ப்புகள் கிடைக்கும்.
தமிழக அரசு மாணவா்களின் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மாணவா்கள் கல்வி கற்பதில் முழு கவனம் செலுத்தி, உயா்கல்வி பயின்று தங்களது எதிா்காலத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இதில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கோவை தனியாா் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்த பேகேராஅள்ளியைச் சோ்ந்த மாணவி பிரியா, தன்னுடைய கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தியுள்ளதற்காக, அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தாா்.
விழாவில், முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, பேரூராட்சி உதவி இயக்குநா் கண்ணன், வட்டாட்சியா் கலைச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலா் ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவண்ணன், மீனா ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

