20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, வன்னியா் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகில் திரண்ட வன்னியா் சங்கத்தினா் மற்றும் பாமகவினா், அங்கிருந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊா்வலமாகச் சென்று நகராட்சி அலுவலகத்தை அடைந்தனா். இதைத் தொடா்ந்து அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாநில துணைத் தலைவா் சாந்தமூா்த்தி, மாவட்டச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை மாவட்ட நிா்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கக் கோரி வன்னியா் சங்கத்தினரும், பாமக நிா்வாகிகளும் மனு அளித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

