விண்ணப்பித்த அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜி.மாதையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், தருமபுரி மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கோரி, விண்ணப்பித்த அனைவருக்கும், குடியிருப்புகளை ஒதுக்கித்தர வேண்டும். கறவை மாடுகள், உழவு மாடுகள் வாங்க நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் வழங்க வேண்டும். தலித், பழங்குடியினா் குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீா், குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

