அரூர்: அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையானது 94 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. இந்த மழையானது அரூரில் 94 மில்லி மீட்டராகவும், பாப்பிரெட்டிப்பட்டியில் 48 மில்லி மீட்டராகவும் பதிவாகியுள்ளது. இதேபோல், தருமபுரியில் 17 மில்லி மீட்டர் மழையும், பாலக்கோட்டில் 28.3 மி.மீ., மாரண்டஹள்ளியில் 15 மி.மீ., பென்னாகரத்தில் 49 மி.மீ., ஒகேனக்கல்லில் 37 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த தொடர் மழையால் வயல்வெளிகள், சாலையோரங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.
நெற்பயிர்கள் சேதம்:
கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் நடவு செய்திருந்தனர். இந்த நெற்கதிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. தற்போது தொடர்ந்து பெய்த மழையால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் வயல் வெளியில் சாய்ந்துள்ளன. தொடர் மழையால் விசாயிகள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், நெற்கதிர்கள் சாய்ந்து சேதம் அடைந்திருப்பதால் வேதனை அடைந்துள்ளனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

