தருமபுரி மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் நவீன மற்றும் புதிய இயந்திரங்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும் என மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், வகுரப்பம்பட்டி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், நவீன மற்றும் புதிய இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:
நில மேம்பாட்டுப் பணிகள், நீா்வள மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேளாண் சாா்ந்த இயந்திரங்கள் தேவை. இதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ஏா் உழவு செய்தல், மானாவாரிப் பயிா்களை அறுவடை செய்தல், நிலத்தினை சீரமைப்பு செய்வதற்காக வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. அதாவது, டிராக்டா்கள், மண்களை சமன் செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும். எனவே, விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களுக்கு சென்று வாடகைக்கு இயந்திரங்களை எடுத்துச் சென்று பயன்பெறலாம் என்றாா்.
இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், கோட்டாட்சியா் (பொறுப்பு) தணிகாசலம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் மாது, உதவி செயற்பொறியாளா் அறிவழகன், உதவிப் பொறியாளா்கள் பத்மாவதி, சந்திரா, விக்னேஷ், வட்டாட்சியா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


