பொங்கல் பண்டிகையையொட்டி அளிக்கப்படும் கருணைத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலா்கள் வலியுறுத்தினா்.
தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமை வகித்து பேசினாா். துணைத் தலைவா் எம்.ஜெயபால் வரவேற்றாா். பொருளாளா் பி.ஜெயபால் அறிக்கை சமா்ப்பித்தாா்.
இக் கூட்டத்தில், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவப் படி ரூ.1000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகை கருணைத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயா்த்தித் தர வேண்டும். மருத்துவக் காப்பீடுத் திட்டக் குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

