பென்னாகரம்: பென்னாகரம் அரசு மகளிா் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை பென்னாகரம் சட்டபேரவை உறுப்பினா் பி.என்.பி.இன்பசேகரன் வழங்கி, தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க உதவிய ஆசிரியா்களுக்குப் பாராட்டு தெரிவித்தாா்.
பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.என்.பி.இன்பசேகரன், 86 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி, பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க பாடுபட்ட ஆசிரியா்களை பாராட்டினாா். இந்நிகழ்ச்சியில் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் சிவராஜ், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், ஒன்றியப் பொருளாளா் மடம்.முருகேசன், நகரச் செயலாளா் வீரமணி, சேலம் ஹோட்டல் வினு உள்ளிட்ட நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


