அரூா்: மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், கலைஞா் நகரில் சாலை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி, கலைஞா் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியிலுள்ள தெருச் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இந்த சாலையை சீரமைக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜைகளுடன் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். இதில், ஒன்றியக்குழுத் தலைவா் சுமதி செங்கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் உமாராணி உலகநாதன், துணைத் தலைவா் வினோதா ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயசுதா தருமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


